மியான்மரின் பாகோ நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 80 பேர் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், கொல்லப்பட்டவர்களின் சடலங்களையும் இராணுவத்தினா் எடுத்துச் சென்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
வெள்ளிக்கிழைமை இந்தப் படுகொலைகள் நடைபெற்றபோதும் படுகொலை இடம்பெற்ற கிராம மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அருகிலிருக்கும் கிராமத்துக்கு அனுப்பப்பட்டதால் இது குறித்த செய்திகள் தமதமாகவே வெளியாகியுள்ளன.
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் கூட்டத்தை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். பின்னர் கொல்லப்பட்டவர்களின் சடலங்களை இராணுவத்தினர் அள்ளிச் சென்றனர். இதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 80-க்கும் அதிகமாக இருக்கலாம். இதனைச் சரியாகக் கணிக்க முடியாத நிலை உள்ளது என மியான்மா் மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.
மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. அதன் பிறகு அங்கு 43 சிறுவா்கள் உட்பட 600-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூா் அமைப்புக்கள் கூறுகின்றன.
எனினும் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை, இதை விட அதிகமாக இருக்கலாம் என மியான்மர் அரசியல் கைதிகளுக்கான உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.